sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்; மாணவர்களுக்கு ஓவிய போட்டி

/

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்; மாணவர்களுக்கு ஓவிய போட்டி

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்; மாணவர்களுக்கு ஓவிய போட்டி

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்; மாணவர்களுக்கு ஓவிய போட்டி


ADDED : மார் 25, 2025 10:10 PM

Google News

ADDED : மார் 25, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், எம்.ஜி சஞ்சீவ்ராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி 'சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் நோக்கம்' குறித்து பேசினார்.

அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவாக பல்வேறு தலைப்புகளில் ஓவியப்போட்டி நடந்தது. தொடர்ந்து சிட்டுக்குருவி குறித்து குறும்படம் திரையிடப்பட்டது.

மேலும், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக உயிரியல் ஆய்வாளர் மகேஷ்குமார் அங்குள்ள விலங்குகள், பறவைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us