/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு
/
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : செப் 28, 2025 01:49 AM
' திருப்பூர் :கனரா வங்கி தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் சணல் பொருள் தயாரிப்பு இலவச பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சதீஷ்குமார் அறிக்கை:
திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த 14 நாள் முழு நேரப் பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் வரும் 4 ம் தேதி நடக்கிறது. பயிற்சியில் சேர குறைந்த காலியிடங்களே உள்ளது. இதில், எழுதப் படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை; முற்றிலும் இலவசம். இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சுய தொழில் துவங்க வங்கி கடன் உதவிக்கு வழி காட்டப்படும். இதில் சேர விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன், பயிற்சி நிலையத்துக்கு நேரில் வரவும். மேலும் விவரங்களுக்கு, 94890 43923 மற்றும் 99525 18441 எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.