/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை பெற அழைப்பு
/
தொழிற்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : பிப் 15, 2025 05:58 AM
திருப்பூர்: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரில் படிக்கும் மாணவர்கள், கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரி-களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிய-ருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்ப-டுத்தப்பட்டு வருகிறது.
எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்-தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்-படிப்பு போன்ற பிற படிப்பு, அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள். https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொ-கைக்கு விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள். இவ்-வாறு கூறியுள்ளார்.