/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'
/
கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'
கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'
கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'
ADDED : ஜூன் 16, 2025 11:53 PM
திருப்பூர்; பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்பை தொடர்வதில் உள்ள சிக்கல் என்ன என்பதை அறியும் நோக்கில், முதன் முறையாக, மாணவர்களுக்கான குறைகேட்பு முகாம், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், இன்று (17ம் தேதி) நடத்தப்பட உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கட்டாயம் கல்லுாரி படிப்பை தொடர வேண்டும் என்பதில், மாநில அரசு உறுதியாக உள்ளது. கட்டுப்பாட்டு அறை அமைத்து, கடந்த கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோல்வியடைந்த மாணவ, மாணவியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது; அவர்களது பெற்றோர் வாயிலாக அவர்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, பிளஸ் 2வுக்கு பின் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவியரின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்யவும்; அதன் தொடர்ச்சியாக அவர்களை உயர்கல்வியில் இணைய செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நோக்கில், முதன் முறையாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
''திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று, காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.20ல், மாணவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவியர், இம்முகாமில் பங்கேற்க வேண்டும்'' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.