sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'

/

கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'

கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'

கல்லுாரி படிப்பு தொடர தடையா? மாணவர்கள் 'மனம் திறக்கலாம்'


ADDED : ஜூன் 16, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்பை தொடர்வதில் உள்ள சிக்கல் என்ன என்பதை அறியும் நோக்கில், முதன் முறையாக, மாணவர்களுக்கான குறைகேட்பு முகாம், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், இன்று (17ம் தேதி) நடத்தப்பட உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கட்டாயம் கல்லுாரி படிப்பை தொடர வேண்டும் என்பதில், மாநில அரசு உறுதியாக உள்ளது. கட்டுப்பாட்டு அறை அமைத்து, கடந்த கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தோல்வியடைந்த மாணவ, மாணவியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது; அவர்களது பெற்றோர் வாயிலாக அவர்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பிளஸ் 2வுக்கு பின் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவியரின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்யவும்; அதன் தொடர்ச்சியாக அவர்களை உயர்கல்வியில் இணைய செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நோக்கில், முதன் முறையாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

''திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று, காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.20ல், மாணவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவியர், இம்முகாமில் பங்கேற்க வேண்டும்'' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us