sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்களைக் கசக்கிப்பிழிவதா? ஆவேசப்படுகிறது அ.தி.மு.க.,

/

மக்களைக் கசக்கிப்பிழிவதா? ஆவேசப்படுகிறது அ.தி.மு.க.,

மக்களைக் கசக்கிப்பிழிவதா? ஆவேசப்படுகிறது அ.தி.மு.க.,

மக்களைக் கசக்கிப்பிழிவதா? ஆவேசப்படுகிறது அ.தி.மு.க.,


ADDED : மார் 31, 2025 05:57 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., 'பூத் கமிட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்ற, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:

அபரிமிதமான சொத்துவரி உயர்வு, குப்பை வரி உயர்வு, 6 சதவீத அபராத வட்டி என, பல்வேறு வகையில் மக்களிடம் இருந்து சுரண்டிய திருப்பூர் மாநகராட்சி, உபரி பட்ஜெட் தாக்கல் செய்தது பெருமையல்ல. மக்களை கசக்கிப்பிழிந்து, வரியினங்களை உயர்த்தியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியின் வரி உயர்வு ஆகாயத்தை தொட்டுவிட்டது. உபரி பட்ஜெட் தாக்கல் செய்து என்ன பயன் என, கூட்டணி கட்சி கவுன்சிலர்களே கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை துவக்கியுள்ளனர். கடந்த 2021 வரை 'குட்டி ஜப்பான்' என்று புகழப்பட்ட திருப்பூர், கடலில் மூழ்கிய கப்பலை போலவும், காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை போலவும் மாறிவிட்டது. உயர்த்திய வரிகளை குறைக்க வேண்டும். நான்கு கோடி ரூபாய்க்கு மேல் உபரி நிதியை காண்பித்துள்ளதால், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.






      Dinamalar
      Follow us