sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒதுக்கிய வீடு கிடைக்குமா; மாற்றுத்திறனாளி கண்ணீர்

/

ஒதுக்கிய வீடு கிடைக்குமா; மாற்றுத்திறனாளி கண்ணீர்

ஒதுக்கிய வீடு கிடைக்குமா; மாற்றுத்திறனாளி கண்ணீர்

ஒதுக்கிய வீடு கிடைக்குமா; மாற்றுத்திறனாளி கண்ணீர்


ADDED : டிச 03, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தாராபுரம் தாலுகா, கொளத்துப்பாளையத்தை சேர்ந்த முகமது யூசுப், 57; கால் பாதித்த மாற்றுத்திறனாளி.

வீடு கேட்டு தொடர்ந்து போராடிய இவருக்கு, கடந்த 2022ல், பெதப்பம்பட்டி - உடுமலை ரோடு புக்குளம் ஜெ.ஜெ., நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பங்களிப்பு தொகை, 1.70 லட்சம் ரூபாய் செலுத்தவேண்டிய நிலையில், முகமது யூசுப், மீதம் ஒரு லட்சம் ரூபாயை தன்னால் செலுத்த முடியாததால், வீட்டை பெற முடியாமல் தவிக்கிறார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், முகமது யூசுப், வீடு வழங்க கோரி தரையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கலெக்டரிடம் சென்று, கண்ணீர் மல்க மனு அளித்தார்.

அவர் கூறியதாவது:

என்னால், வேலைக்கு செல்லமுடியவில்லை. மனைவியின் சிறிய வருமானம் மற்றும் எனக்கு கிடைக்கும் மாற்றுத்திறனா ளிகள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

புக்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தனர். பலரிடம் கடன் வாங்கித்தான், தவணை தொகை, 70 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். மீதம் ஒரு லட்சம் ரூபாய் என்னால் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன்.

ஒரு லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க கோரி, பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டேன். குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் நேரடி யாக மனு அளித்தேன். வங்கி கடன் செலுத்த இயலாது என்பதால், மாற்று ஏற்பாடுகள் மூலம், ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us