sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்

/

 கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்

 கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்

 கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்


ADDED : நவ 12, 2025 11:24 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை வழியாக, தற்போது, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல, தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை, திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர்.

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். ஆனால், இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை.

இதை அமைக்க வேண்டும் என, பயணியர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us