sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மல்லிகை கிலோ ரூ.1,000

/

மல்லிகை கிலோ ரூ.1,000

மல்லிகை கிலோ ரூ.1,000

மல்லிகை கிலோ ரூ.1,000


ADDED : செப் 29, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூரில் மல்லிகைப்பூக்கள் விலை கிலோ ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், அனைத்துவகையான பூக்கள் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

குறிப்பாக, பெண்கள் விரும்பி சூடும் மல்லிகை, நேற்று கிலோ ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது; முல்லை, கிலோ 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சரஸ்வதி பூஜைக்கு பயன்படுத்தப்படும் செவ்வந்திப்பூ, கிலோ 200 ரூபாயாக உள்ளது.

வாழை இலை ஒன்று (தலைவாழை இலை), 15 ரூபாய்; தோரணமாக தொங்கவிடும் மாவிலை ஒரு கொத்து 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து, வரும் நாட்களில் பழங்கள், பூக்கள் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என, வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.

பூ மார்க்கெட் கடைகள், பழமுதிர் நிலையங்கள், ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகளில், பூ, பழங்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us