sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ., 1ம் தேதி துவக்கம்

/

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ., 1ம் தேதி துவக்கம்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ., 1ம் தேதி துவக்கம்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ., 1ம் தேதி துவக்கம்


ADDED : அக் 24, 2025 11:48 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் பயிற்சி வரும் நவ. 1ல் துவங்குகிறது.

திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு கூறியிருப்பதாவது:

திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் பயிற்சி வரும் நவ. 1ல் துவங்குகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், தாராபுரம், சின்னக்கடை வீதியில் செயல்படும், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட்டுவருகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோர், 04258 220640 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சி, முதல் இரண்டு வாரங்கள், ஞாயிற்றுக்கிழமையும்; மூன்றாவது மற்றும் நான்காவது வாரம், சனிக்கிழமையும் நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சிக்கான கட்டணமாக, 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். இப்பயிற்சியில், நகையின் தரம் அறியும் உபகரணங்களும் வழங்கப்படும். 40 மணி நேர வகுப்பறை பயிற்சி; 60 மணி நேரம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்து சான்று பெறுவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இப்பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோர், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக சேரலாம்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us