/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை உறுதி திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வேலை உறுதி திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 14, 2026 07:24 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி கிராமத்தில், 125 நாள், தேசிய வேலை உறுதித் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேசியதாவது:
குழந்தைகளை, குடும்பத்தை குடிக்க வைத்ததுதான் தி.மு.க.,வின் சாதனை. நாட்டின் சுதந்தரத்துக்காக பாடுபட்ட காந்தியின் பெயரை திருடி பயன்படுத்தி வரும் போலியான காந்திகள், நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இனி, குட்டை வேலை என்று யாரும் சொல்ல வேண்டாம். 'ஜி ராம் ஜி' என்று கூறுங்கள். உங்களுக்காகத்தான் மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.
பள்ளிக்கு வரும் குழந்தைகள், பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் கொண்டு வந்தார்களா என்று சரிபார்ப்பது போய், இன்று, புத்தகப் பையில் கஞ்சா இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. நமது குழந்தைகளின் எதிர்காலம் பாழாவதை வேடிக்கை பார்க்க முடியாது. நமது குழந்தைகளின் எதிர்காலம் நாம் போடும் ஓட்டில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

