/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு
/
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு
ADDED : செப் 20, 2024 10:47 PM
திருப்பூர் : திருப்பூர் திருமுருகன்பூண்டி, செட்டிபாளையத்தில் உள்ள ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி யில், வரும், 22ம் தேதி (நாளை) காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை இம்முகாம் நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், நீட், ஐ.ஐ.டி., - ஜெ.இ.இ., - பயிற்றுநர் - எச்.ஆர்., உள்ளிட்ட கே.ஜி., வகுப்பு துவங்கி, 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இதில், பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தினர் நேரில் பங்கேற்று, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை வாய்ப்பு பெற விரும்புவோர், 82484 - 70862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.