ADDED : செப் 27, 2024 12:26 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் காங்கயம் குழும கல்வி நிறுவனம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காங்கயம் பில்டர்ஸ் கல்லுாரியில் நாளை (28 ம் தேதி) காலை, 8:00 மணிக்கு நடைபெறுகிறது.
முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றன. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல், பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
கல்விச்சான்று, பயோடேட்டாவுடன் முகாமில் பங்கேற்கவேண்டும். வேலை தேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944.