ADDED : டிச 25, 2024 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி வரும், 28ம் தேதி ராமய்யர் திருமண மண்டபத்தில் துவங்குகிறது. வரும், 28ம் தேதி முதல் ஜன., 1ம் தேதி வரை, இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அமர்நாத் பனிலிங்க தரிசனம் உள்ளிட்ட ஜோதிர்லிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜயோக கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், ஒலி, ஒளி அரங்கம், நவதேவிகளின் தத்ரூப காட்சி உள்ளிட்டவையும் இடம் பெற உள்ளது. மக்களுக்கு அனுமதி இலவசம். விபரங்களுக்கு ஈஸ்வரிய வித்யாலாய கிளை நிலையங்களை அணுகலாம்.

