ADDED : ஜூன் 21, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளுக்கு பிரதமர் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் இணைவதற்கு விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர். அதன்படி விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்படுகிறது.
அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வரும், 23ம் தேதி முதல் 15 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வி.ஏ.ஓ., அலுவலங்களில் இம்முகாம் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் விவசாயிகள் தாங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படும் விவரங்கள் சரிபார்க்க இந்த எண்ணுக்கு ஓ.டி.பி., அனுப்பப்படும்.
இந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனைத்து திட்டங்களிலும் பயன் பெற முடியும்.