/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்டல சிலம்பப்போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
/
மண்டல சிலம்பப்போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 04, 2024 09:36 PM

உடுமலை ; மண்டல அளவிலான சிலம்பப்போட்டியில், கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேஷன் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான சிலம்பப்போட்டி உடுமலையில் நடந்தது.
போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்தும் 40 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 20 பேர் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று, 'ஓவர் ஆல் சாம்பியன்' பட்டத்தையும் பெற்றனர்.
வித்ய நேத்ரா சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவர்களும், சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.