sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்

/

பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்

பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்

பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 04, 2025 10:54 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கொழுமம் குப்பம்பாளையத்திலுள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையத்தில், நுாற்றாண்டுகள் பழமையான, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், செல்வகணபதி, சூளைக்கருப்பண்ணசாமி, பையம்மன், கன்னிமார், வீரமாத்தி அம்மன், முத்தம்மாள், நாக கன்னியர், கருடாழ்வார் ஆகிய பரிவார தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின.

தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், மகா சுதர்ஸன ஹோமம், கும்ப அலங்காரம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

நேற்று காலை, திருப்பள்ளி எழுச்சி, திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை, 8:00 மணிக்கு, கலச புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு, மகா சம்ப்ரோஷனம் எனும் மகா கும்பாபிேஷகம் நடந்தது.

இதில், தெலுங்கு மன்னவார் குல பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us