sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

/

'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை


ADDED : ஜூலை 20, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''சமூக வலைதள மாயையில் இன்றைய இளைஞர்கள் சிக்கிவிடக்கூடாது'' என்று வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் முதன்மை சேவகர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பூரில் நேற்று பாரத் நேதாஜி அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் முதன்மை சேவகர் அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார், பா.ஜ., கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் அறக்கட்டளையை துவக்கிவைத்தனர். பின், அண்ணாமலை பேசியதாவது:

இன்றைய இளைஞர்களுக்கு தெளிவு தேவை. எந்த வயதில் தங்களுக்கான பாதையை தேர்வு செய்ய வேண்டும்; அதற்கான நேரம் போன்ற புரிதல் முக்கியம். முழு நேர அரசியல்வாதியாக என்று அரசியலை வேலையாக செய்ய ஆரம்பித்தார்களோ, அன்று தான் தவறுகள் நடக்கத் துவங்கின.

பல இளைஞர்களுக்கு எந்த பாதையை தேர்ந்தெடுப்பதில் என்ற குழப்பம் இருந்தால், ஒரு ஆண்டு களத்துக்கு வந்து, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக பணியை செய்யுங்கள். வாரத்துக்கு, இரு நாட்கள் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று, இயற்கையோடு, மக்களுடன் எதிர்பார்ப்பு இல்லாமல் வேலை செய்யுங்கள்.

சினிமா மோகம், சமூக வலைதளம் மாயம் என, எல்லாவற்றிலும் சிக்கி, நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் யார் என்பதை,முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இருக்கும் இடத்தை விட்டு நகருங்கள். வாழ்க்கையில், 20 முதல், 30 வயதுக்குள் உங்களை நிலை நிறுத்த வேண்டும். சமூக வலைதளம் என்ற மாய வலையில் சிக்க வேண்டாம். முதலில், 'ஈகோ'வை உடைத்தால், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். உங்கள் ஆற்றலை, இந்த உலகம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

மாணவ, மாணவியர் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

--

திருப்பூரில் நேற்று நடந்த பாரத் நேதாஜி அறக்கட்டளை துவக்கவிழாவில், 'வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகர் அண்ணாமலை பேசினார். அருகில், இடமிருந்து: அறக்கட்டளை ஒருங்கணைப்பாளர் சரத்குமார், மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி.

நேதாஜி வரலாறு இருட்டடிப்பு

சுதந்திரத்துக்கு பின், நேதாஜி வரலாறு இருட்டிப்பு செய்யப்பட்டது. காந்தியின் சரித்திரம் எந்தளவு தெளிவாக உள்ளதோ, அதே போன்று, நேதாஜியின் சரித்திரம் பதிவாகவில்லை. தேசியம் பேசியதற்காக, அவர் கல்லுாரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பதினாறு வயதில் தேசியம் பற்றி பேசினார். கடந்த 1864 முதல், 1915 வரை என, 51 ஆண்டுகளில், 63 பேர் தான் ஐ.சி.எஸ்., தேர்வு எழுதினர். நேதாஜி, இந்த தேர்வை எழுதி, நான்காவது இடம் பெற்றார்.பிரிட்டிஷ்காரர்களுக்கு வேலை செய்யாமல், இந்தியாவின் சுதந்திரத்துக்காக, 24 வயதில், களமிறங்கி போராட ஆரம்பித்தார். இருபது ஆண்டு மக்கள் பணியில், ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.இருமுறை காங்., கட்சி தலைவராக இருந்தவர். காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வெளியே வந்து பார்வர்டு பிளாக் கட்சி துவக்கினார். அதிரடி மார்க்கத்தை கையில் எடுத்தவர். இளைய தலைமுறையினர் அவரது வரலாறை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.- அண்ணாமலை, முதன்மை சேவகர்,வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்.



நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் 'ஜெய்ஹிந்த்'

ஒரு சக்தி வாய்ந்த சொல் உள்ளது; அதுதான் 'ஜெய்ஹிந்த்'. இதை நாம், பெருமிதத்தோடு, நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும். வரலாற்றை மறந்த, எந்த நாடும் வளர்ந்ததாக சரித்திரம் கிடையாது. இன்றைக்கு நம்மை பிரித்தாழ, நுாற்றுக்கணக்கான சித்தாந்தங்கள் உள்ளன. தேசத்தை, 2047ல் வளர்ந்த பாரதமாக்க வேண்டும்.இன்றைக்கு நம் நாடு பலமாக, உறுதியாக இருப்பதற்கு காரணம், அடிப்படை அஸ்திவாரம் தான். அந்த அடிப்படை அஸ்திவாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பகல்ஹாமில் நடந்த தாக்குதல், உளவியல் ரீதியாக, நம்மை நிலை குலையவைக்க, சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தேசமே கொந்தளித்தது. நமக்கு இன்னொரு முகமும் உள்ளது. அது தான், நேதாஜி முகம். அதை தான், ஆப்ரேஷன் சிந்துாரில் பார்த்தோம். இந்தியா என்பது எனது நாடு, கோவில். இந்தியாவில் ஒரே தேசியம் தான்; அது இந்திய தேசியம் மட்டும் தான்.- மதன்குமார், முன்னாள் ராணுவ மேஜர்.








      Dinamalar
      Follow us