/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்குச் சீமையில் பொங்கல் களைகட்டும்
/
கொங்குச் சீமையில் பொங்கல் களைகட்டும்
ADDED : ஜன 08, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, வஞ்சிபாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், கொங்கு வேளாளர் அறக்கட்டளை 44வது மகாசபை கூட்டம் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடந்தது.
உப தலைவர் முத்துசாமி வரவேற்றார். 2022- - 23ம் ஆண்டு வரையிலான ஆண்டு அறிக்கையை செயலாளர் கோவிந்தப்பன்; செலவு கணக்குகளை பொருளாளர் கந்தசாமி தாக்கல் செய்தனர்; மகாசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. தீரன் சின்னமலை கல்லுாரி வளாகத்தில் புதிதாக துவங்க உள்ள சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளி குறித்த விவரங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இணைச் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.