sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு

/

சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு

சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு

சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு


ADDED : மார் 17, 2025 01:36 AM

Google News

ADDED : மார் 17, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20ல் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சூழல் மாற்றங்களால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் மத்தியில், பறவை ஆர்வலர்கள் கூறியதாவது:

வீடுகளில் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து வெளியேறும், வேதியியல் கழிவு, புகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், வீடுகளின் அருகில் வருவதற்கு சிட்டுக்குருவிகள் அச்சப்படுகின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பதற்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். வீடுகளில் இடம் உள்ள வரை தோட்டம் அமைப்பது, அந்த தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பூச்சிக்கொல்லி, ரசாயன மருந்துகள் தெளிக்காமல் அவற்றை இயற்கை முறையில் பராமரிக்க வேண்டும்.

முடிந்த வரை வீட்டிற்கு வெளியில் அல்லது மாடி தளங்களில் தண்ணீர் வைப்பது, தானியங்களை துாவி அவற்றுக்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் சிட்டுக்குருவியை வரவேற்கும்.






      Dinamalar
      Follow us