sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்

/

உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்

உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்

உயிரோவியமாய் சிலிர்த்தெழும் மனித முகங்கள்


ADDED : பிப் 10, 2024 11:24 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் குடும்பத்தை சேர்ந்த இளைஞரின் திருமண ஆல்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களது உறவினர்கள். மணமகன், மணமகளுடன், உற்றார், உறவினர் புடைசூழ இருந்த 'குரூப் போட்டோ'வில், சில நிமிடம் கண் பதித்து, ஒவ்வொருவரை பற்றி அளவளாவி கொண்டிருக்கையில், அனைவரது விழிகளும் திடீரென ஆச்சர்யத்தில் விரிகின்றன. முகத்தில் சந்தேக கோடுகள் நிரம்ப, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்...

மணமகனின் தந்தை இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அந்த ஆல்பத்தில், அவர் மணமகன் அருகே உயிரோடு நின்றுக் கொண்டிருந்த காட்சி தான், இதற்கு காரணம்.

''இது, என் அப்பா தான்; ஆனா, டிராயிங்...'' என அந்த இளைஞர் கூற, வியப்பில் வாய் பிளக்கின்றனர் உறவினர்கள். ஆம், 'ைஹப்பர் ரியாலிஸ்டிக் போர்ட்ராய்ட்ஸ்' எனப்படும் ஓவியங்கள் தான், இப்படியான உயிரோட்டத்தை தருகின்றன.

இந்த ஓவியக்கலையை திறம்பட கற்று, தொழில் ரீதியாகவே செய்து வருகிறார், திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் வசிக்கும் சிவபாலன். 25 என்ற இளைஞர்.

''நான்காம் வகுப்பில் இருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. 8ம் வகுப்பில் இருந்து, ஓவியப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை பெறத் துவங்கினேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏராளமான ஓவிய முறைகள் வந்தாலும், கையால் வரையப்படும் ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை.

குறிப்பாக, கற்பனை காட்சிகளை உயிரோட்டம் நிறைந்ததாக காண்பிக்கும் பண்பு, இவ்வகை ஓவியங்களுக்கு உண்டு. கிராபிக் பென்சில், நிலக்கரி பென்சில் உதவியுடன் இவ்வகை ஓவியம் வரைகிறேன். மனிதர்களின் முகங்களை, உயிரோவியமாக வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம்'' என்றார்.

---

சிவபாலன் தீட்டிய ஓவியங்கள்

---

சிவபாலன்

65 மணி நேரத்தில் 60 ஓவியம்

தற்போது, 65 மணி நேரத்தில், 60 ஓவியம் வரைந்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில்' இடம் பிடித்துள்ள சிவபாலன், ''வளரும் கலைஞர்களை ஒருங்கிணைத்து கலை சமூகத்தை ஏற்படுத்துவதே, எதிர்கால ஆசை'' என்கிறார்.








      Dinamalar
      Follow us