sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு

/

பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு

பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு

பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைப்பு


ADDED : ஜன 02, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; தர்பூசணி சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்பட்ட நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, விளக்கு பொறிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக கோடை சீசனை இலக்காக வைத்து தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விளைநிலங்களில் மேட்டுப்பாத்தி, சொட்டு நீர் பாசனம் அமைத்து, நிலப்போர்வை தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றனர். தற்போது, சின்னவீரம்பட்டி, தாந்தோனி உள்ளிட்ட பல பகுதிகளில், இச்சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவமழைக்குப்பிறகு, தர்பூசணி சாகுபடியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விளைநிலங்களில், விளக்குப்பொறி வைத்து கட்டுப்படுத்தும் முறையை, விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'தரமான தர்பூசணி பழங்கள் உற்பத்திக்கு நோய்த்தாக்குதலை குறித்த நேரத்தில், கட்டுப்படுத்துவது அவசியம். ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில், விளக்குப்பொறி வைத்து, பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கும் முறையை பின்பற்றுகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us