/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்
/
வள்ளலார் நினைவு நாள் பிப். 1ல் மதுக்கடை மூடல்
ADDED : ஜன 28, 2026 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மணிஷ் நாரணவரே அறிக்கை:
வரும் பிப்.1ம் தேதி, வடலுார் ராமலிங்கர் (வள்ளலார்) நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் மது விற்பனைக்கு அன்றைய தினம் தடை விதிக்கப்படுகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகள் அத்துடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற பார்கள், ரெஸ்டாரண்டுடன் இணைந்த பார்கள், மனமகிழ் மன்ற பார்கள் உள்ளிட்ட அனைத்து வகை மது விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் மூடப்பட்டு, மது விற்பனை நிறுத்தப்பட வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

