/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று முதல் துவங்குகிறது கால்நடை சுகாதார முகாம்
/
இன்று முதல் துவங்குகிறது கால்நடை சுகாதார முகாம்
ADDED : ஜூன் 20, 2025 02:35 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம், இன்று முதல் துவங்குகிறது.
கால்நடை பராமரிப்பு துறை மூலம், நடப்பு நிதியாண்டுக்கான, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், இன்று முதல் முகாம்கள் துவங்குகின்றன. 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், ஒன்றியத்துக்கு தலா 12 முகாம்கள் வீதம், மொத்தம் 156 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும், குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்தப்படும், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை, கருப்பை மருத்துவ உதவி உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் தீர்க்கும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர், அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம்.