sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

/

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி


ADDED : ஜூன் 02, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : வைகாசிவிசாக தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நேற்று நடந்தது.

திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், கோவில் வளாகம், மேல்தளம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன; நவீன கருவியை கொண்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து, கோபுரம், கற்துாண்கள் மற்றும் சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டன.

கொடிமரம் மற்றும் கோவில் தளங்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்கள், விளக்கு ஸ்டாண்ட்கள், சுவாமி அபிேஷக ஸ்டாண்ட்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பயன்படுத்தும் ஆடைகள், திரைச்சேலைகளும், சலவை செய்து கொடுக்கப்பட்டன. 60 பெண்கள் உட்பட, 150க்கும் அதிகமானவர்கள், உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

இதனால், நேற்று பகல் நேர சுவாமி தரிசனம் நடக்கவில்லை; மாலையில் இருந்து, வழக்கம் போல் பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us