ADDED : நவ 30, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் அவிநாசி வழியாக வந்தது. அவிநாசி, சூளை பஸ் ஸ்டாப்பில் காமிலா என்பவர் பஸ்சில் ஏறி, திருப்பூருக்கு பயணித்தார். அந்த பெண் பர்ஸ் மற்றும் மொபைல் போனை பஸ்சில் தவற விட்டு, திருப்பூரில் இறங்கி விட்டார்.
பஸ்சில் தவற விட்டு சென்ற பொருட்களை டிரைவர் வேல்முருகன், நடத்துனர் ராமு ஆகியோர் கண்டெடுத்து, அந்த பெண் பஸ் ஏறிய அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர். பெண் பயணிக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரிடம் நேரடியாக பஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். இருவரையும், அனைவரும் பாராட்டினர்.

