sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறைந்த செலவில் செடி; அவரை விவசாயிகள் ஆர்வம்

/

குறைந்த செலவில் செடி; அவரை விவசாயிகள் ஆர்வம்

குறைந்த செலவில் செடி; அவரை விவசாயிகள் ஆர்வம்

குறைந்த செலவில் செடி; அவரை விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஜூன் 11, 2025 09:37 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கிணற்று பாசனத்துக்கு குறைந்த செலவு பிடிக்கும், செடி அவரை சாகுபடியில் ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை பாப்பனுாத்து, விளாமரத்துப்பட்டி, சாளையூர் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக காய்கறி சாகுபடி செய்கின்றனர். இதில், அவரை சாகுபடி கணிசமான பரப்பளவில் சாகுபடியாகிறது.

குறைந்த தண்ணீர் தேவை மற்றும் சாகுபடி செலவு குறைவாக உள்ளதால், கோடை கால சீசனில் நடவு செய்கின்றனர். செடிகள், 60 நாட்கள் வளர்ந்த பிறகு, அவரை அறுவடை செய்கின்றனர்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. அறுவடை செய்த அவரையை உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

தற்போது பாப்பனுாத்து பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள அவரை செடிகளில், பூ விட்டு காய் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. வரும் பருவமழை சீசனில், சந்தைக்கு வரத்து குறைந்து, அவரைக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us