ADDED : ஏப் 22, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் திங்கள் தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், கன்றுகுட்டி, 4,000 - 6,000 ரூபாய், காளை, 28 ஆயிரம் - 32 ஆயிரம், எருமை 26 ஆயிரம் - 30 ஆயிரம், பசு மாடு, 28 ஆயிரம் - 34 ஆயிரம் ரூபாய் என விற்றது. மொத்தம், 855 கால்நடைகள் வந்தன.
கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் கால்நடை வரத்து குறைந்த நிலையில், விற்பனை சற்று அதிகரித்ததால், கன்றுக்குட்டி, மாடு விலை உயர்ந்தது. காளை, எருமை விலையில் மாற்றமில்லை. மொத்தம் 1.40 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.