/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டக்கூடாது மா.கம்யூ., போராட்டம்
/
குப்பை கொட்டக்கூடாது மா.கம்யூ., போராட்டம்
ADDED : மே 26, 2025 11:50 PM

பெருமாநல்லூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சி, காளம் பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
மருந்து தெளித்தல் உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை என கூறி கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களும், அவ்வப்போது, குப்பை கொட்ட வரும் லாரியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், மா.கம்யூ கட்சியினர், 'குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரு தினங்களுக்கு முன் பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம், பள்ளி பாளையம் உள்ளிட்ட பகுதி வீடுகளில் பொது மக்கள் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று காலை குப்பை கொட்ட வரும் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். நேற்று காலை கட்சியினர் பொது மக்களுடன் லாரியை சிறை பிடிக்க காத்திருந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் நேற்று குப்பை கொட்டுவதை நிறுத்தியது. அதிகாரிகள் கட்சியினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கட்சியினர் 'இங்கு குப்பை கொட்டகூடாது. மீறி கொட்டினால் லாரியை தடுத்து நிறுத்துவோம்' என தொடர்ந்து கூறி வருகின்றனர்.