ADDED : நவ 22, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் நடந்த மகா பெரியவா அனுஷ பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை ஜி.டி.வி., லே-அவுட் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் காஞ்சி மகா பெரியவா அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, அனுஷ பூஜை நடந்து வருகிறது. கார்த்திகை மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி இப்பூஜை விமரிசையாக நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, காஞ்சி மகா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, வேதபாராயணம் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மிக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.
தொடர்ந்து, உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும், ஆரோக்கியதற்கும் கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.

