sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மக்காச்சோள பயிர் காப்பீடு:  விவசாயிகளிடம் ஆர்வம்

/

 மக்காச்சோள பயிர் காப்பீடு:  விவசாயிகளிடம் ஆர்வம்

 மக்காச்சோள பயிர் காப்பீடு:  விவசாயிகளிடம் ஆர்வம்

 மக்காச்சோள பயிர் காப்பீடு:  விவசாயிகளிடம் ஆர்வம்


ADDED : டிச 10, 2025 09:01 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலகம் ஒன்றியங்கள் உட்பட திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டை விட இந்தாண்டு, மக்காளச்சோள பயிருக்கு காப்பீடு செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், நெல், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் 18 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பொதுவாக, மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

ஆனால், கடந்த இரு ஆண்டாக மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில், விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது; நடப்பு சீசனில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவுற்றது.

வேளாண் துறையினர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மக்காச்சோள பயிருக்கு கடந்தாண்டு, 2,200 விவசாயிகள் காப்பீடுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு, 3,239 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டை விட, 1,000 விவசாயிகள் கூடுதலாக பயிர்க்காப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் மக்காச்சோள பயிருக்கு சேதம் ஏற்படும் போது, காப்பீடு தொகை பெறுவது எளிமையாக இருக்கிறது.

கடந்தாண்டு, காப்பீடு தொகை வேண்டி விண்ணப்பித்த, 1,271 விவசாயிகளுக்கு, 3.62 கோடி ரூபாய் காப்பீடு நிறுவனம் வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது; இதுபோன்ற காரணங்களால், விவசாயிகளுக்கு நம்பிக்கை அதிகரித்து, காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us