sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ADDED : ஜூலை 24, 2025 08:30 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர், தாராபுரம் ரோடு, காளிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பிரியதர்ஷினி மற்றும் போலீசார் காளிபாளையம், ஏரிக்காடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, 1,350 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் ஒரு வீட்டில் பதுக்கியது தெரிந்தது.

இது தொடர்பாக, கோவை - நேரு நகரைச் சேர்ந்த சுதாகர், 21 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அவரிடம் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us