/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி பஸ்சில் டீசல் திருடிய நபர் கைது
/
பள்ளி பஸ்சில் டீசல் திருடிய நபர் கைது
ADDED : நவ 23, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கோவையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியின் பஸ் டிரைவர். பல்லடம் அடுத்த கேத்தனுாரில் பஸ்சை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மர்ம நபர்கள் பஸ்ஸில், 80 லிட்டர் டீசலை திருடி விட்டனர். இதுகுறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் அங்கு ஈச்சர் வேன் ஒன்று நீண்ட நேரம்நின்று சென்றது தெரிய வந்தது.
வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில், அவர் விருதுநகரைச் சேர்ந்த ராமலிங்கம், 42 என்பது தெரிய வந்தது. அவர் டீசல் திருடியதை ஒப்புக் கொண்டார்.
போலீசார் அவரை கைது செய்தனர்.

