sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயில் பயணியிடம் நகை திருடிய ஆசாமி கைது

/

ரயில் பயணியிடம் நகை திருடிய ஆசாமி கைது

ரயில் பயணியிடம் நகை திருடிய ஆசாமி கைது

ரயில் பயணியிடம் நகை திருடிய ஆசாமி கைது


ADDED : மே 16, 2025 12:56 AM

Google News

ADDED : மே 16, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ;திருச்சியை சேர்ந்தவர் ரத்தின மோகன், 59. இவர் தன் பேத்தியின் பிறந்த நாள் விழாவுக்காக, தன் குடும்பத்துடன் கேரளா மாநிலம், கண்ணனுார் சென்றார். கடந்த, 12ம் தேதி மீண்டும் திருச்சி செல்ல கண்ணனுார் -- யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரசில் பயணித்தார்.

இதற்காக, திருப்பூரில் இறங்கி, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இறங்கி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார்.

அப்போது அவரிடம் இருந்த பையை யாரோ திருடி விட்டனர். அதில் அவர் 11.5 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பாபு மேற்பார்வையில், போத்தனுார் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவந்திகா தலைமையில் தனிப்படை போலீசார் இதில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நகையை திருடிய நாமக்கல்லை சேர்ந்த சின்னையன், 49, என்பவரை கைது செய்து, 11.5 பவுன் நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us