sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

/

விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை


ADDED : ஜூன் 30, 2025 12:33 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில், சிவபெருமான் அந்தணராக வந்து, மாணிக்கவாசகர் கூற, ஓலைச்சுவடியில் திருவாசகம் எழுதியதாகவும், மறுநாள், மகம் நட்சத்திர நாளில், மாணிக்கவாசகர் ஜோதியாய் இறைவனுடன் கலந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

ஆனி மாதம் மகம் நட்சத்திர நாளான நேற்று, சிவாலயங்களில் மாணிக்கவாசகர் குருபூஜைநடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த ஜாமபூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், குருபூஜை விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி துவங்கியது; பகல்,11:30 மணிக்கு, மாணிக்கவாசகர் மகா அபிேஷகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில்எழுந்தருளிய மாணிக்கவாசகர், வெளி மற்றும் உட்பிரகார உலா வந்து, இறைவனுடன் கலந்தார்.

கனகசபையில் வீற்றிருக்கும் ஸ்ரீநடராஜருடன் ஜோதியாய் கலக்கும் விழா பூஜைகளை, சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். கோவில் ஓதுவார்மூர்த்தி தியாகராஜன் மற்றும் சிவனடியார்கள், சிவபுராணம் உள்ளிட்ட திருவாசக பதிகங்களை பண்ணிசையுடன் பாடி வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us