sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'

/

மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'

மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'

மரக் 'கொலை'; தர வேண்டும் 'மிகப்பெரும் விலை'


ADDED : பிப் 23, 2024 12:08 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரில் சாலை விரிவாக்கப்பணி உள்பட வளர்ச்சிப்பணிகள் என்ற போர்வையில், ஏராளமான மரங்கள், எந்தவித அனுமதியோ, விதிகளையோ பின்பற்றாமல், அடியோடு வெட்டிச்சாய்க்கப்படுகின்றன. இதைப் பார்த்துக் கண்ணீர் சொரியும் பூமித்தாய்க்கு, நாம் எதிர்காலத்தில் இதற்கான 'விலை'யைக் கொடுக்க வேண்டியிருக்கும்!

மனிதன் வாழ ஏற்ற சூழலாக இருக்கும் மரங்கள் குறைந்ததால் மனிதன் வாழ தேவையான 'ஆக்சிஜனுக்கு' திண்டாட வேண்டிய நிலையை நோக்கி தற்போது மறைமுகமாக நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம். நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் 'கார்பன் மோனாக்சைடு' தாக்கம் தீவிரமடைந்து விட்டது. இதனை தடுக்க கூடிய மரங்கள் அன்றாடம் ஏதாவது இடத்தில் வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து

அட்டூழியம்

திருப்பூர் - மங்கலம் ரோட்டில் கடந்த சில மாதங்களாக ரோடு விரிவாக்கப் பணி, கால்வாய் பாலம் அமைக்கும் பணி என, பல பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக, எவ்வித அனுமதியில்லாமல், 15 ஆண்டு, 25 ஆண்டு என, பல ஆண்டுகளாக நிழல் கொடுத்து நம்மை பாதுகாத்து வந்த மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.மங்கலம் ரோட்டில் மட்டும் அல்ல. மாநகரின் பல இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில், கணக்கில் வராத மரங்களையும் அடியோடு வெட்டி வரும் கொடூரமான நிகழ்வு அரங்கேறி வருகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களால் ஆண்டுக்கணக்காக நிழல் வந்த மரங்கள் வெட்டப்பட்டு மாயமாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---

திருப்பூர் குமரன் கல்லுாரி அருகில், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

அப்பட்டமான விதிமீறல்கள்

வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் போது, அதற்கான சட்ட விதிகளை பின்பற்றி உரிய அனுமதி பெற்ற பின்னரே அகற்ற வேண்டும். ஆனால், இன்று பாரபட்சம் இல்லாமல், விதிமீறல்களில் கணக்கில் இல்லாத பழமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டுவதற்கு முன், சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.அவை, சாலை விரிவாக்கம், அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டடம், பொதுப்பணித்துறை வாய்க்கால், மாநகராட்சி வேலைகள், அரசு இடங்களில் உள்ள இடையூறு தரும் மரங்கள் என, சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள எடுக்க வேண்டிய மரங்களை அந்த துறை அதிகாரிகள் மரங்களுடைய போட்டோ, சாலை விரிவாக்கத்தின் குறியீட்டுடன் அளவுடன், மரங்கள் போட்டோ எடுக்க வேண்டும்.பின், கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு பின், இரண்டு தன்னார்வ அமைப்புகளும் ஒப்புதல் தர வேண்டும். வெட்டும் சூழல் ஏற்பட்டால், அதற்கு தகுந்த மரங்களை நடுவது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளது.இதுதொடர்பான பசுமை கூட்டம், மாதந்தோறும் நடக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற கூட்டம் நடந்து மாவட்டத்தில் கடந்த, 18 மாதங்கள் ஆகியுள்ளது. மாவட்ட வனத்துறை அலுவலர் இடமும் பால மாதங்களாக காலியாக உள்ளது.25 ஆண்டு மரங்கள் காலி'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் துரைசாமி கூறியதாவது:சாலை விரிவாக்கம் என்ற பெயரில், மங்கலம் ரோடு மட்டுமல்லாமல், மாநகரில் பல இடங்களில் மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். இதுதொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து கேட்டால், வெட்டுவதற்கான ஆவணங்களை காட்ட மறுக்கின்றனர்.கலெக்டர் தலைமையிலான பசுமை குழுவில் முடிவு செய்த பின் தான், மரங்களை வெட்ட வேண்டும். ஆனால், எந்த விதியையும் பின்பற்றாமல், மரங்களை வெட்டி சாய்ப்பது வேதனையாக உள்ளது. இதனால், 25 ஆண்டுகள் பழமையான வேம்பு, அரசு, ஆல் என, பல வகை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.மரம் மனிதர்களுக்கு நிழல் மட்டும் தருவதில்லை. பல வகையில் சுற்றுசூழலை பாதுகாக்கிறது. வெட்டப்படுவதால், அதில் வாழ்ந்து வந்த எவ்வளவோ பறவைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us