sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மராட்டியர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

/

மராட்டியர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

மராட்டியர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

மராட்டியர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : மார் 31, 2025 07:20 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'குடிபடுவா' என்ற சைத்ர மாதத்தின் முதல் நாள், பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வருகிறது. பிரம்மா, படைத்தல் தொழிலை இந்நாளில் துவங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்ட வருட பிறப்பு, சாலிவாகனன் என்ற மன்னரால் துவங்கப்பட்டது.

சத்ரபதி சிவாஜி பல தேசங்களை வெற்றி வாகை சூடி திரும்பிய போது, மராட்டிய மக்கள் வீடுகளில் காவி கொடியை கட்டி வரவேற்றனர். இந்நாளை, யுகாதி என்று மக்கள் கொண்டாடுகின்றனர். மராட்டிய மக்கள், 'குடிபடுவா' என்ற பெயரில், புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

திருப்பூரில் வசிக்கும் மராட்டிய மக்கள், நேற்று எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து கொண்டாடினர். ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலில் உள்ள, பாண்டுரங்கன், ருக்மாயி தேவியை வழிபட்டனர்.

கோவிலில், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. 'குடிபடுவா' கொம்பு வைத்து வழிபட்டனர்.

ஏற்பாடுகளை, ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மாயி சேவா டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட பாவுசர் சத்திரிய சங்கம், திருப்பூர் மாவட்ட மகிளா மண்டலி, திருப்பூர் யுவா சமாஜ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us