/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 'ஓம்சக்தி' கோஷம் முழங்க கொடியேற்றம்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 'ஓம்சக்தி' கோஷம் முழங்க கொடியேற்றம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 'ஓம்சக்தி' கோஷம் முழங்க கொடியேற்றம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 'ஓம்சக்தி' கோஷம் முழங்க கொடியேற்றம்
ADDED : ஏப் 11, 2025 10:27 PM

உடுமலை, ; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நேற்று நடந்தது.
பிரசித்தி பெற்ற உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கடந்த, 8ம் தேதி, இரவு திருக்கம்பம் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
கம்பம் போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள், வேப்பிலையுடன் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று கோவில் கொடிமரத்தில், திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, திருவிழா கொடியேற்றம் நடந்தது.
அதன்பின், மதியம், 2:00 மணி முதல், பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. வரும், 15ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 16ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மதியம், 4:15 மணிக்கு நடக்கிறது. 18ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும், 19ம் தேதி, காலை, 10:30 மணிக்கு கொடியிறக்கம், 11:00 மணிக்கு மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை அம்மன், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். வரும், 18ம் தேதி வரை, தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.