நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயம், சிவன்மலை, எருக்கலங்காட்டுபுதுாரை சேர்ந்தவர் ஜவஹர், 45;. பேப்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு தனியாக அறைகள் உள்ளது.
கடந்த, இரு நாள் முன் நள்ளிரவு நிறுவனத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலிகளை வெட்டி, முகத்தில் துண்டு கட்டி கொண்டு நுழைந்த நபர்கள், அறையில் இருந்த மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டு விசாரித்தனர். அருகில் இருந்த அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஆசாமிகள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

