/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில் மருத்துவ ஊழியர் பலி; அரசு நிவாரணம் வழங்க மனு
/
விபத்தில் மருத்துவ ஊழியர் பலி; அரசு நிவாரணம் வழங்க மனு
விபத்தில் மருத்துவ ஊழியர் பலி; அரசு நிவாரணம் வழங்க மனு
விபத்தில் மருத்துவ ஊழியர் பலி; அரசு நிவாரணம் வழங்க மனு
ADDED : பிப் 18, 2025 10:03 PM

- நமது நிருபர் -
''விபத்தில் பலியான, மக்களை தேடி மருத்துவ ஊழியரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனு:
உடுமலை தாலுகா, செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைத்தில், ஜடையாம்பாளையத்தை சேர்ந்த பிரியா, 21, மக்களைத்தேடி மருத்துவ ஊழியராக பணிபுரிந்துவந்தார்.
இவர், கடந்த 15ம் தேதி பணி நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும், டிரைவரையும் இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவேண்டும். இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.