ADDED : டிச 09, 2024 11:46 PM
திருப்பூர்; திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கூறியதாவது: ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி உயர்வில் புதிய சீரமைப்பு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1,500 ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடைக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 1,500 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள ஆடைக்கு, 18 சதவீதமும், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகான மதிப்புள்ள ஆடைக்கு, 28 சதவீதம் வரி விதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இதை ஏற்கக்கூடாது. தொழில்துறையினர் ஒன்றிணைந்து, இதுதொடர்பாக வலியுறுத்த வேண்டும்.
அபரிமித சொத்து வரி உயர்வால், திருப்பூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லடம் ரோடு, பகுதியில், 11 ஆயிரத்து, 890 ரூபாயாக இருந்த சொத்துவரி, ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து, 981 ரூபாயாக உயர்ந்துள்ளது. முருகம்பாளையத்தில், ஆயிரத்து 170 ஆக இருந்தது, 60 ஆயிரத்து, 356 ரூபாயாக உயர்ந்துள்ளது.
