sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்; மே 1 முதல் இயக்கம்

/

புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்; மே 1 முதல் இயக்கம்

புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்; மே 1 முதல் இயக்கம்

புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள்; மே 1 முதல் இயக்கம்


ADDED : ஏப் 07, 2025 08:53 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில், 86 புதிய வழித்தடங்களில், மே 1 முதல், மினி பஸ் இயக்கம் துவங்குகிறது.

அனைத்து மாவட்டங்களிலும், பஸ் வசதி இல்லாத கிராம, நகர்ப்புற பகுதிகளை கண்டறிந்து, புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, உடுமலை, தாராபுரம் ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.

வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த பட்டியல் அடிப்படையில், பஸ் வசதி இல்லாத 86 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து துறையினர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 14; திருப்பூர் தெற்கு - 33; தாராபுரம் - 17; உடுமலை - 22 என, 86 புதிய மினி பஸ் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு - 32; தாராபுரம் - 8; உடுமலை - 19 என, இதுவரை 59 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 வழித்தடங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.

தயாராகும் மினி பஸ்கள்


வழித்தட அனுமதி பெறும் மினி பஸ் உரிமையாளர்கள், பஸ்களை தயார்படுத்திவருகின்றனர். புதிய பஸ் வாங்கி பதிவு செய்வது; வேறு நபர்களின் பஸ்களை வாங்கி பெயர் மாற்றம் செய்வது போன்ற பணிகள் நடக்கின்றன.

மினி பஸ்களை ஆய்வு செய்தபின், ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில், இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக அனுமதி அளிக்கப்படும். வரும் மே 1 முதல், புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேவையை பொறுத்து வழித்தடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நகர பகுதிகளுக்கு வந்து செல்வதில் உள்ள சிரமங்கள் குறையும்.

900 விண்ணப்பங்கள்


புதிய வழித்தடங்களில் பஸ் இயக்குவதற்காக மினி பஸ் உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வழித்தடம் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 86 வழித்தடத்துக்காக, 900 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, வழித்தடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. ஒரே வழித்தடம் கேட்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது குலுக்கல் நடத்தி, வழித்தடம் ஒதுக்கப்படுகிறது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us