ADDED : ஏப் 07, 2025 02:43 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 86 புதிய வழித்தடங்களில், மே 1 முதல், மினி பஸ் இயக்கம் துவங்குகிறது.
அனைத்து மாவட்டங்களிலும், பஸ் வசதி இல்லாத கிராம, நகர்ப்-புற பகுதிகளை கண்டறிந்து, புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, உடு-மலை, தாராபுரம் ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவ-லகங்கள் உள்ளன. வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவ-ரத்து கழக அதிகாரிகள் அளித்த பட்டியல் அடிப்படையில், பஸ் வசதி இல்லாத 86 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர் வடக்கு வட்டார போக்-குவரத்து அலுவலக எல்லைக்குள் 14; திருப்பூர் தெற்கு - 33; தாராபுரம் - 17; உடுமலை - 22 என, 86 புதிய மினி பஸ் வழித்-தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு - 32; தாராபுரம் - 8; உடுமலை - 19 என, இதுவரை 59 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்-டுள்ளது. மீதமுள்ள 27 வழித்தடங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.

