sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாதிரி தேர்வு; 52 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

/

மாதிரி தேர்வு; 52 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மாதிரி தேர்வு; 52 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மாதிரி தேர்வு; 52 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 28, 2025 11:07 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வருவாய் வழி தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு பிப்., 22ம் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்கு, உடுமலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு இரண்டு மாதங்களாக நடக்கிறது.

மேலும் இதன் சார்பில், வருவாய் வழி தேர்வுக்கான மாதிரி தேர்வு நேற்று மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.

இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் முதல் இரண்டு பருவங்களில் உள்ள பாடப்பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளைச்சேர்ந்த, 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

தேர்வு நிறைவு பெற்ற பின், வினாத்தாள் சார்ந்த பாடப்பகுதிகள் குறித்து, மாணவர்களுடன் கருத்தாளர்கள் கலந்துரையாடல் நடத்தினர். தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us