sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அடக்கமும் நிதானமும் வானளவு உயர்த்தும்

/

 அடக்கமும் நிதானமும் வானளவு உயர்த்தும்

 அடக்கமும் நிதானமும் வானளவு உயர்த்தும்

 அடக்கமும் நிதானமும் வானளவு உயர்த்தும்


ADDED : டிச 22, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடந்தது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

அவரவர் தம் கடமைகளை தவறாமல் செய்து வந்தலே, அதற்குரிய பலன்களை அடையலாம். முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற பணிகளை, வரங்களாக நினைக்க வேண்டும்.

நல்லவற்றை எப்படி உபயோகப்படுத்துவது, எந்த வகையில் என்பதில் அளவுகோல் இல்லை. வயதில், தோற்றத்தில், பொருளாதாரத்தில் எப்படி இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி; முதலில், அவருக்கான மரியாதையை நாம் தர வேண்டும்.

பிறருக்கு தீங்கு விளைவிக்காமல், வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடன் சேர்ந்து இருப்பவர்களை, மனம் வருத்தப்படும் படி பேச்சும், செயலும் இருக்கக் கூடாது.

அடக்கம், நிதானம் ஒருவரை வான் அளவு உயர்த்தும். செல்வமும், புகழும் ஒரு போதும் நம்முடைய மதிப்பை உயர்த்தாது.

தன்னடக்கம் எப்போதும் உயர்வான வாழ்க்கை தரும்.

இவ்வாறு, திருச்சிகல்யாணராமன் பேசினார்.






      Dinamalar
      Follow us