sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழை இல்லாமல் கருகும் மானாவாரி பயிர்கள்

/

மழை இல்லாமல் கருகும் மானாவாரி பயிர்கள்

மழை இல்லாமல் கருகும் மானாவாரி பயிர்கள்

மழை இல்லாமல் கருகும் மானாவாரி பயிர்கள்


ADDED : மே 24, 2025 05:57 AM

Google News

ADDED : மே 24, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை பகுதியில், கோடை மழை போதியளவு பெய்யாததால், மானாவாரி பயிர்கள் பாதித்து விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கோடை கால மழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடிக்கு, விதைப்பு செய்தனர். குறிப்பாக, கால்நடைகளின் தீவனத்தேவைக்காக, சோளம், மக்காச்சோளம், கம்பு உட்பட சாகுபடிகளுக்கு, பருவமழை துவங்கும் முன், விதைப்பு செய்கின்றனர்.

இதில், தானியங்கள் விளைச்சல் குறைவாக இருந்தாலும், கால்நடைகளின் உலர் தீவன தேவைக்காக, பயிர்களின் தட்டு பயன்படுகிறது.

ஆனால், நடப்பாண்டு, விதைப்புக்கு பிறகு பயிரின் வளர்ச்சி தருணத்தில், மழை பெய்யவில்லை; மானாவாரி பயிர்களின் வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. சில இடங்களில், போதிய மழையின்றி, பயிர்கள் கருகி வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், 'மானாவாரி சாகுபடியில், பல ஆண்டுகளாக போதியளவு விளைச்சல் கிடைக்கவில்லை. பருவமழைப்பொழிவு குறைந்துள்ளது முக்கிய காரணமாகும். நடப்பாண்டு, கால்நடைகளின் உலர் தீவன தேவைக்கு கூட சோளம் உட்பட பயிர்களின் வளர்ச்சி இல்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us