sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது

/

பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது

பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது

பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது


ADDED : அக் 10, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் - 11'வது திட்டத்தின் கீழ், ஊத்துக்குளியில், 75 நெட்டிலிங்கம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் லட்சியத்தில், வெற்றி அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்து திட்டங்களில் இதுவரை, 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை பல இடங்களில் குறுங்காடு போல வளர்ந்து பசுமையை பரப்பி வருகின்றன.

தற்போது, 11ம் திட்டம் துவங்கி மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. பருவமழை பொழியும் நிலையில், பசுமைப்பணி தொடர்கிறது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் உள்ள மகேந்திரா வாட்டர் நிறுவனத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. அதில், நெட்டிலிங்கம் வகையை சேர்ந்த, 75 மரக்கன்று நடப்பட்டது.

அந்நிறுவனத்தின், கூடுதல் தலைமை பொறியாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us