sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைக்கு பின் கொசுத்தொல்லை; அலட்சியத்தில் அதிகாரிகள்

/

மழைக்கு பின் கொசுத்தொல்லை; அலட்சியத்தில் அதிகாரிகள்

மழைக்கு பின் கொசுத்தொல்லை; அலட்சியத்தில் அதிகாரிகள்

மழைக்கு பின் கொசுத்தொல்லை; அலட்சியத்தில் அதிகாரிகள்


ADDED : அக் 29, 2024 11:43 PM

Google News

ADDED : அக் 29, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, மழை பெய்வதால், பல இடங்களில், தண்ணீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

கிராம குடியிருப்புகளிலும், முறையாக குப்பை அப்புறப்படுத்தாமல் இருப்பதால், மழைக்கு பிறகு துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசு உற்பத்தியாகும் வகையில், பல பகுதிகளிலும், மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது.

பருவமழை காலத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை; அப்பணிகளில், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை. இதனால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us