sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முருகன் கோவில்கள் கோலாகலம்

/

முருகன் கோவில்கள் கோலாகலம்

முருகன் கோவில்கள் கோலாகலம்

முருகன் கோவில்கள் கோலாகலம்


ADDED : நவ 03, 2024 11:22 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் பகுதி சிவன், முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்றுவருகிறது. கந்தப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்படுகிறது. திரளான பக்தர்கள், சஷ்டி விரதம் கடைபிடித்து, முருகப்பெருமானை வழிபட்டுவருகின்றனர்.

n பல்லடம், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி, சூர சம்ஹார விழா, விநாயகர் வேள்வியுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. வரும் 7ம் தேதி, மூலவர் முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம், பிற்பகல், 3:30 மணிக்கு வேள்வியை தொடர்ந்து, அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலை, 5:15 மணிக்கு மரகதாம்பிகை அம்மையிடம் வேல் பெறும் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

n வாலிபாளையம் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை, அபிஷேகம்; மதியம், 12:00 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. 7ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, சூரசம்ஹார காட்சி நடைபெறுகிறது.

n திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் வெவ்வேறு வண்ண மலர் அலங்காரத்தில், முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இரண்டாவது நாளான நேற்று, முருகப்பெருமானுக்கு ரோஸ் நிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று வெள்ளை நிற பூக்கள்; நாளை சிவப்பு நிறம்; நாளை மறுநாள், பச்சை நிறப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. வரும் 7ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. சூர சம்ஹாரம் முடிவடைந்தபின், வரும் 8ம் தேதி, அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us