/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்
ADDED : ஜூன் 19, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த செம்மொழி நாள் கட்டுரைப்போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் 2 மாணவி மேகவர்ஷினி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபாலசுங்காரா, மாணவிக்கு 7 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி பராாட்டினார். மாணவியை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணைச்செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.