/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தடகள போட்டி: அசத்திய போலீஸ் ஏட்டு
/
தேசிய தடகள போட்டி: அசத்திய போலீஸ் ஏட்டு
ADDED : பிப் 18, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் -2024 போட்டி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இப்போட்டியில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து பலரும் பங்கேற்றனர். அதில், திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் காளியப்பன் பங்கேற்று அசத்தியுள்ளார். 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்து, வெண்கலம் வென்றுள்ளார்.